“எமக்கான திரைப்பட மொழியை உருவாக்கிடுவோம்” என்ற கோஷத்தை முன்னிறுத்தி மூன்றாவது தமிழ்(?) குறுந்திரைப்பட விழா நடந்தேறிருக்கிறது. இது அமைப்புரீதியாகவோ, அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டோ நடத்தி முடிக்கப்பட்டதேயல்ல. ஒருசிலரின் சிரமதானங்களும் பொருள்தானங்களுமே நல் நோக்காய் பரிணமித்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடிக்குமளவில் சிரமங்கள், நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தும், திரைப்படக் கனவுகளுடன் இருக்கும் பல திறைமைசாலிகளை ஊக்குவிக்க வேண்டும், இருக்கும் வசதிகளைக்கொண்டு தம் திரைப்பட தாகத்தை தீர்க்கக் களம் அளிக்க வேண்டும், சொற்ப செலவில் நற் கருத்துகளை திரைப்படம் வாயிலாக எமது சமூகத்துக்குச் சொல்லமுடியும்....சொல்லுங்களேன் என்பதாக எம்மவர்களின் திரைப்பட வளர்ச்சியில் நல் அக்கறை கொண்டு,இந்நல் நோக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இக் குறுந்திரைப்பட விழாவை ஒழுங்கு செய்து திறம்பட நடத்தியிருந்த இக்குழாமைப் பாராட்டியே தீரவேண்டும்.